மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை! பொதுமக்களை வெளியேற அறிவுறுத்தல்
கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில பகுதிகளுக்கு 3ஆம் நிலை மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை
இதற்கமைய கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் 2ஆம் நிலை எச்சரிக்கையும், காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் முதலாம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ, மெததும்பர, கண்டி கங்கவட்ட கோரளை, உடுதும்பர, தோலுவ, யட்டிநுவர, உடபலத்த, பஹத்தஹேவஹெட்ட, உடுநுவர, பாததும்பர மற்றும் தெல்தோட்டை ஆகிய இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாத்தளையில் உக்குவெல, யடவத்த, ரத்தோட்டை, பல்கமுவ, அம்பகல பல்கமுவ, வில்கமுவ, நாவுல ஆகிய இடங்களுக்கும் நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனையிலும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
