யாழ். கீரிமலை கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்றவருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் - கீரிமலை கடலில் நீந்திக் கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (20.04.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை - கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குளிக்கச் சென்று உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குழுவினருடன் குறித்த நபர் கீரிமலை கேணியில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
ஏனையோர் கேணியில் குளித்துக் கொண்டிருந்த நிலையில், அவர் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், சிறிது நேரத்தில் அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆறு மணிநேரமாக மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! கடலின் நடுவில் அதிரடி காட்டிய அமெரிக்கா - வெளியான காணொளி