தலைக்கவசத்தால் அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞர்
புலத்சிங்கள, ஹல்வதுர பகுதியில் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு நபர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மீண்டும் ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் புலத்சிங்கள, ஹல்வதுர பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஆவார்.
தாக்குதல் தொடர்பாக 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



