கோமரங்கடவல பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு நேற்றிரவு (16) கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவல-சமகி மாவத்தை பகுதியைச் சேர்ந்த லஹிறு சதறுவன் (26 வயது) எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கோமரங்கடவல பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த வீதியால் பயணித்த இளைஞரைச் சோதனையிட்ட போது அவர்களிடமிருந்து 5 கிராம் 600 மில்லிகிராம் ஹொரோயின் போதைப்பொருள் கைப்பற்றாட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிறுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தேகநபர் தொடர்பில் விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாக கோமரங்கடவல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்