முல்லைத்தீவில்15 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய இளைஞன் கைது
முல்லைத்தீவு(Mullaitivu) புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் 15 வயதுடைய சிறுமியினை தகாத முறைக்கு உட்படுத்திய 18 வயது இளைஞனை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு தேராவில் கிராமத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் தனது வீட்டில் 15 வயதும் 10 மாதங்களும் நிரம்பிய சிறுமி ஒருவரை அழைத்துவந்து தங்கவைத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சிறுமி மீட்கப்பட்டுள்ளதுடன் இளைஞனையும் கைதுசெய்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனை
குறித்த சிறுமி பாட்டியுடன் வாழ்ந்து வந்த நிலையில் அந்த இளைஞனுடன் ஏற்பட்ட காதல் காரணமாக இளைஞன் அழைத்து சென்று சிறுமியுடன் உறவு கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரியிடம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிறுமியுடன் உறவுகொண்ட இளைஞனை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
