மன்னார் கடல் பகுதியில் ஆபத்தாக மாறும் பிளாஸ்ரிக் பொருட்கள்
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலிலிருந்து வெளியேறிய, ஆபத்தான பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்காலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பிலேயே இன்று காலை மேற்படி சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் எனச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறிய உருண்டைகள் கடற்கரையோரங்கள் முழுவதிலும் சிதறிக் கிடப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
குறித்த பகுதிக்கு மன்னர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் நேரடியாகச் சென்று கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்ரிக் பொருட்கள் தொடர்பாகப் பார்வையிட்டுள்ளனர்.
தென்பகுதியில் எறிந்த கப்பலின் தாக்கம் குறித்த பகுதியிலும் உணரப்பட்டுள்ளது.
மேலும் அரிப்பு பகுதியிலும் குறித்த பிளாஸ்ரிக் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.























16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
