கனடாவில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக ஏமாற்றப்பட்ட இளைஞர்கள்
மினுவாங்கொடை பகுதியில் கனடாவில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி இளைஞர்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இளைஞர்களிடமிருந்து சந்தேகநபர் ஐந்து கோடி ரூபாவிற்கு மேல் மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
மோசடியில் சிக்கியவர்கள்
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இளைஞர்களிடம் மோசடி செய்த பணத்தை மீளப்பெற்றுக்கொடுக்குமாறு உத்தரவிட்ட பிரதான நீதவான், பிணை கோரிக்கையை பரிசீலிக்க முடியும் என்றும் அறிவித்துள்ளார்.
சந்தேகநபரின் மோசடியில் சிக்கியவர்கள் நாடு முழுவதிலும் இருப்பதாகவும், மேலதிக முறைப்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
