வெளிநாட்டுத் தொழிலுக்கு செல்லும் யுவதிகளின் பரிதாப நிலை! சுனில் ஹந்துன்னெத்தி கவலை
வெளிநாட்டுத் தொழிலுக்குச் சென்றுள்ள யுவதிகள் நாடு திரும்ப தங்கள் கற்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுனில் ஹந்துன்னெத்தி கவலை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (21.05.2023) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, மத்திய கிழக்கு செல்லும் பெண்களுக்காகப் பெருந்தொகை ஒன்றைத் தரகுப் பணமாக முகவர் நிலையங்கள் பெற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் பணிப் பெண்களுக்கு அதில் ஒரு சிறு தொகையே அன்பளிப்பாகக் கிடைக்கின்றது.
முகவர் நிலையங்கள் தலையிடுவதில்லை
அதேபோன்று வெளிநாடுகளில் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் பணிப்பெண்களை இங்கு அழைத்து வர முகவர் நிலையங்கள் தலையிடுவதில்லை. அவர்கள் கைவிரித்து விடுகின்றார்கள்.
அரசாங்கம் அவ்வாறானவர்களை அந்தந்த நாடுகளில் பாதுகாப்பு இல்லம் என்ற பேரில் தங்குமிடமொன்றை ஏற்பாடு செய்து மாதக்கணக்கில் தடுத்து வைக்கின்றது.
அப்பாவி பெண்கள்
அவர்களுக்கான உணவு போன்ற தேவைகளுக்கு பெரும் தொகை செலவிடப்படுகின்றது. அதற்குப் பதிலாக அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பும் ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க முடியும். அதற்கான வசதி அரசாங்கத்திடம் இருந்தும் அவர்கள் அலட்சியம் செய்கின்றார்கள்.
கடைசியில் அப்பாவி பெண்கள் தங்கள் கற்புகளைத் தூதரக அதிகாரிகளிடம் இழந்த பின்னர் தான் நாடு திரும்ப முடிகின்றது. இந்த நிலை மாற வேண்டும் என்றும் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 4 மணி நேரம் முன்

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri

தனது லுக்கை கலாய்த்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா...வைரல் Cineulagam
