நாட்டில் உள்ள இளம் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை
நாட்டில் உள்ள நன்னடத்தை மற்றும் குழந்தைகள் காப்பக மையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள் 18 வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதாக பிரஜா சக்தி அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இவர்களுக்கு சரியான வேலை பயிற்சி அல்லது நிதி உதவி இல்லாததால் இவ்வாறான நிலைமைக்கு காரணமாகும்.
இந்த இளம் பெண்களில் பலர் நீதிமன்றங்களால் இந்த மையங்களில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு பாலியல் துஷ்பிரயோகம் அல்லது துன்புறுத்தலை எதிர்கொண்டதாக அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் எச்.ஏ. லக்ஷ்மன் கூறியுள்ளார்.
இவர்களை பராமரிக்க பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் இல்லாததால் இத்தகைய மையங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு
இத்தகைய இளம் பெண்கள் இந்த மையங்களை விட்டு வெளியேறும்போது வேலை தேட சிரமப்படுகிறார்கள். அதன்படி, பயிற்சி அல்லது பாதுகாப்பு இல்லாமல், பலர் பணம் சம்பாதிப்பதற்கான எளிதான வழியாக பாலியல் தொழிலைத் தேர்வு செய்கிறார்கள்.

சிலர் சமூகத்திற்குத் திரும்பிய பிறகு மீண்டும் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள், இது அவர்களை மேலும் இந்த வேலையில் தள்ளுகிறது.
தற்போது, சுமார் 10,000 பெண் பாலியல் தொழிலாளர்கள் அறக்கட்டளையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதனால், 18 வயதில் நன்னடத்தை மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களை விடுவிப்பதற்கு பதிலாக, 20 அல்லது 21 வயது வரை அவர்களை நன்னடத்தை மையங்களில் இருக்க அனுமதிக்கும் திட்டத்தை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றார்.
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan