தவறான சிகிச்சையினால் உயிரிழந்த இளம் பெண் - சுகாதார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை
திருமணமான இளம் பெண் ஒருவர் சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்ட தவறினால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு ராகம வைத்தியசாலையிடம் அறிக்கை கோரியுள்ளது.
இலக்கம் 199/A தெலத்துர ஜா-அல பிரதேசத்தில் வசித்து வந்த புத்திக்க ஹர்ஷனி தர்மவிக்ரம என்ற இளம் திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சுகாதார அமைச்சு ராகம வைத்தியசாலைக்கு அறிக்கை கோரியுள்ளது.
தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை
பித்தப்பையில் கற்கள் இருந்த நிலையில் கடந்த 31ம் திகதி வத்தளையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
ராகம வைத்தியசாலையில் 25 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 25ம் திகதி உயிரிழந்துள்ளார்.
வத்தளை தனியார் வைத்தியசாலையில் உரிய பராமரிப்பு இன்றி மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையினால் தனது சகோதரி மிகவும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
திருமணமாகி ஒரு மாதமும் சில நாட்களும் ஆன நிலையில், குறித்த இளம் பெண் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri