கட்டுக்கதைகளால் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள தயங்கும் இளைஞர் மற்றும் யுவதிகள்
ஒரு திறமான தடுப்பூசி மீதான நம்பிக்கை மற்றும் தடுப்பூசிகள் தீங்கிழைப்பதாக கூறப்படும் கட்டுக்கதைகளை பல்வேறு தரப்பினர் பரப்புவதன் காரணமாக, 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள், தடுப்பூசிகளை பெறுக்கொள்வதற்கு தயங்குகின்றனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சம்மேளனத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனல் பெர்னாண்டோ இதனை கூறியுள்ளார்.
இந்தக் காரணங்களால், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசிகளின் நன்மைகளை, நாடு இழக்கும். அத்துடன் தடுப்பூசி செலுத்தலின் எதிர்பார்த்த 70% வரம்பை அடைய முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் 50% மக்கள் இதுவரை இரண்டு அளவு தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக, சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
அதேநேரம் 60 அகவைக்கு மேற்பட்ட சிரேஷ்ட பொதுமக்கள் மற்றும் எந்த தடுப்பூசி மருந்துகளையும் பெறாதவர்களிடையே பெரும்பாலான கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன.
எனவே, இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்காக உடனடியாக கொவிட் தடுப்பூசியைப் பெறுமாறு, 30க்கும் 50க்கும் இடைப்பட்ட அகவையினரை அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் கேட்டுள்ளார்.
தொற்று நோய்களுக்கான தேசிய தடுப்பூசி குழுவின் ஒப்புதலுக்குப் பின்னர், இரண்டு அளவுகளையும் பெற்றவர்களுக்கு மூன்றாவது முன்னுரிமை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தல் 2021, நவம்பரில் ஆரம்பமாகும் என்று வைத்தியர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.