மாணவிகளுடன் மோசமாக செயற்பட்ட இளைஞன் கைது
மாத்தறையில் சூம் தொழில்நுட்பத்திற்காக பெக்கேஜ் ஒன்று வழங்குவதாக கூறி பாடசாலை மாணவிகளின் கையடக்க தொலைபேசி இலக்கங்களை பெற்று மோசமாக செயற்பட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இளைஞன் மாத்தறை குற்ற விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஊடாக மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அதிபர்> மாத்தறை குற்ற விசாரணை பிரிவிடம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தமுத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய நபர் எனவும் அவர் பிரதான தரப்பு தொலைபேசி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் கையடக்க தொலைபேசி ஊடாக மாணவிகளின் புகைப்படங்கள் பெற்றுக் கொண்டு அவர்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் இன்று மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri