முல்லைத்தீவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
முல்லைத்தீவு(Mullaitivu) - புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மையிலுள்ள பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து புதுக்குடியிருப்பு, சூசையப்பர் ஆலய சந்தியில் ஒட்டுசுட்டான் வீதியில் இன்று(24.06.2024) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில், புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளினை திடீரென மாடு ஒன்று குறுக்கறுத்து சென்றுள்ளது.
இதன்போது, வேக கட்டுப்பாட்டினை இழந்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் புதுக்குடியிருப்பில் இருந்து எதிரே ஒட்டுசுட்டான் நோக்கி பயணித்து கொண்டிருந்த காரின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து விபத்துக்குள்ளான இளைஞன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து 250 மீற்றர் தூரத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
