நுவரெலியாவில் முச்சக்கரவண்டியுடன் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் பலி
நுவரெலியா (Nuwara Eliya) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா - பதுளை (Badulla) பிரதான வீதியில் மதுர கணபதி ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று (25) முச்சக்கரவண்டி ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லொறியின் சாரதி கைது
இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (26) காலை உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதி நுவரெலியா கலுகெல பகுதியை சேர்ந்த (29) வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இளைஞனின் சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பாரியளவில் சேதமடைந்துள்ள நிலையில், விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
