மின் பாவனையாளர்களுக்கு பேரிடியான செய்தி - சமர்ப்பிக்கப்பட்டது உத்தியோகபூர்வ யோசனை
2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களை திருத்தியமைப்பதற்கான உத்தியோகபூர்வ யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனையானது இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமது செலவுகளை ஈடுகட்டுவதற்காக 13.56% கட்டண அதிகரிப்பை மின்சார சபை இவ்வாறு கோரியுள்ளது.
நள்ளிரவில் பற்றி எரிந்த கார் - கொழும்பை உலுக்கிய இரட்டைக்கொலையில் சிஐடியினருக்கு கிடைத்த முக்கிய ஆதாரம்
கணக்கிடப்பட்டுள்ள நஷ்டம்
மின்சார சபையின் மதிப்பீட்டின்படி, 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான மொத்தச் செலவு ரூ. 136,531 மில்லியன் ஆகும்.

எனினும், தற்போதைய கட்டணங்களின்படி எதிர்பார்க்கப்படும் வருமானம் ரூ. 116,889 மில்லியன் மட்டுமே என்பதால், சுமார் ரூ. 15,847 மில்லியன் நஷ்டம் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிதி இடைவெளியை நிரப்பவே கட்டண உயர்வு கோரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |