கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைது
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் யான் ஓயா பகுதியில் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார்சைக்கிளில் வந்த குறித்த இளைஞர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
ஹொரவ்பொத்தானை பகுதியிலிருந்து ரொட்டவெவ கிராமத்திற்கு மோட்டார்சைக்கிளில் வந்த நபரின் மோட்டார்சைக்கிளை சோதனையிட்ட போது அவரிடமிருந்து கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை - ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்து வருவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இருந்தபோதிலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை இன்றையதினம் கெப்பித்திக்கொல்லாவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளார்.