வவுனியாவில் 15 வயது சிறுமியை தகாத நடவடிக்கைக்கு உட்படுத்திய இளைஞர் கைது
வவுனியா - தோணிக்கல் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் சீண்டலுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
தாயார் முறைப்பாடு
தோணிக்கல் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்ததாகவும், குறித்த சிறுமிக்கு பாலியல் சீண்டலுக்குட்படுத்தியதாகவும் சிறுமியின் தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டுக்கமைய குறித்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட இளைஞரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |