கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய யுவதி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் யுவதி ஒருவரினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் செல்வதற்காக விமான நிலையத்துக்குச் சென்றிருந்த இஸ்ரேலிய யுவதி ஒருவரின் பயணப் பொதியில் 5.56 மில்லிமீற்றர் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் இராணுவத்தில் பணியாற்றிய 22 வயதுடைய யுவதி ஒருவர் தனது நண்பியுடன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இன்று (04) காலை 1.55க்கு துபாய்க்கு புறப்பட்ட விமானத்தில் செல்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது பயண பொதியின் பரிசோதனையின் போது யுவதியின் பொதியில் இருந்து தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த யுவதி கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam