யாழில் வல்லைப்பாலத்தில் தவறி விழுந்து இளைஞரொருவர் மாயம் (PHOTOS)
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் தவறி விழுந்து காணாமல்போயுள்ள நிலையில் அவரைத் தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.
இன்று (22) மாலை வேளையில் சில இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று இளைஞர்கள் பொதுமக்களால் பிடிப்பு
இதன்போது இளைஞரொருவர் தவறி விழுந்த நிலையில் அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க இளைஞரே இவ்வாறு தவறி விழுந்துள்ள நிலையில் இளைஞரைத் தேடும் பணியில் அச்சுவேலி பொலிஸாரும், பொதுமக்களும் இணைந்துள்ளனர்.

இதன்போது தப்பி சென்றுள்ளவர்களில் மூன்று இளைஞர்கள் பொது மக்களால் பிடிக்கப்பட்டு
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 19 மணி நேரம் முன்
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam