புத்தளத்தில் நீரில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு
புத்தளம் - தப்போவ நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (18.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது ரஜரட்ட பிக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த ஹீல்ஓய சங்கானந்த தேரர் என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் நடவடிக்கை
புத்தளம் - வனாத்தவில்லு ஸ்ரீ தர்மராஜ விகாரைக்கு வருகை தந்த மேற்படி இளம் பிக்கு, அங்கிருந்து பிக்குகள் குழுவுடன் தப்போவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றபோதே இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் உயிரிழந்த இளம் பிக்குவின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று (19) நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 5 மணி நேரம் முன்

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri
