துப்பாக்கிகளை ஒப்படைத்த யோஷித ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa ) மகன் யோஷித ராஜபக்ச (Yositha Rajapaksa) தம்மிடம் இருந்த, இரண்டு துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைத்ததாக தகவலறிந்த தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக அவரிடம் இருந்த துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிகள்
யோஷித ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கடற்படை அதிகாரியாக செயற்பட்டார்.இதன்போதே அவருக்கு இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன.

எனினும் அவர் பின்னர் கடற்படையில் இருந்து விலகியதுடன் இதற்கிடையில் காணி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
ரஜினியுடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்னையை சுற்றிய நடிகை.. நேரில் பார்த்த அனிருத்தின் தந்தை Cineulagam
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri