2029ம் ஆண்டிலும் அநுரவே நாட்டின் ஜனாதிபதி - ஆளும் கட்சி
எதிர்வரும் 2029ம் ஆண்டிலும் அநுரகுமார திஸாநாயக்கவே ஜனாதிபதி என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆறு மாதங்களுக்குள் கவிழ்ந்துவிடும் எனத் தொடக்கத்தில் கணித்த எதிர்க்கட்சிகள், இப்போது 2029 ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குப் போதிய அனுபவம் இல்லை என சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முன்வைத்த அனைத்து வாதங்களும் தற்போது பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அரசாங்கத்தைக் கவிழ்க்கக் காத்திருந்தவர்கள், இப்போது 2029 ஜனாதிபதித் தேர்தலைப் பற்றி மட்டுமே கனவு காண்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
எந்தக் பக்கம் திரும்பினாலும் 2029 ஜனாதிபதி வேட்பாளர்கள் உருவாகியுள்ளனர் எனவும் அவர்கள் அனைவரும் ஏற்கனவே பதவிப் பிரமாணம் செய்யத் தயாராக இருப்பது போல் நடந்து கொள்கிறார்கள்" எனவும் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுத் தேர்தலில் தயக்கத்துடனோ அல்லது பயத்துடனோ மாலிமாவிற்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்கள் கூட, தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவாக ஒன்றிணைந்து வருவதாகவும், அரசு மீதான மக்கள் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் சம்பளம் மற்றும் வீடமைப்புப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்கள் காரணமாக, அந்தப் பிராந்தியங்களிலும் அரசாங்கத்திற்குப் பெருமளவு ஆதரவு கிடைத்து வருகின்றது.
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் மக்கள் ஆதரவுமிக்க அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து பயணிக்கும் எனவும், அதன்படி 2029 ஆம் ஆண்டிலும் அனுர குமார திசாநாயக்க நிச்சயமாக மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் சுசந்த குமார நவரத்ன வலியுறுத்தியுள்ளார்.