யோஷிதவிற்கு பிணை விவகாரம்! அரசாங்க தரப்பு விளக்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவிற்கு பிணை வழங்கப்பட்டதே தவிர வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
நிதிச் சலவை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் இதுவரையில் யோஷிதவை ஓர் சந்தேக நபராக பெயரிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யோஷிதவின் வழக்கு
யோஷித தொடர்பான சம்பவம் எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இடம்பெற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை காலமும் யோஷித இந்த வழக்கின் சந்தேக நபராக பெயரிடப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், நபர் ஒருவருக்கு மேல்நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டுமாயின் அதற்கு முன்னர் சந்தேக நபர் என்ற அடிப்படையில் அவரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்த நபரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ள நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது ஓர் சாதாரண நடைமுறையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பிணை சட்டத்தின் பிரகாரம் சந்தேக நபர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாவிட்டால், விசாரணைகளுக்கு இடையூறு இல்லையென்றால் பிணை வழங்கப்படுவது வழமையானதாகும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிதிச் சலவை சட்டம்
மேலும், யோஷிதவிற்கு நிதிச் சலவை சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரும் நோக்கில் இந்த கைது இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

இதன்படி பிணை வழங்கப்பட்டமையானது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாக கருதப்பட முடியாது என நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri