கிவுல் ஓயா திட்டத்தின் ஆபத்தை எடுத்துரைத்த அ. யோதிலிங்கம்
கிவுல் ஓயா திட்டம் அபாயமானது என்றும், அதற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என சட்டத்தரணி சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
கிவுல் ஓயா திடடத்திற்கு எதிராக நாளை மறுதினம் வவுனியா வடக்கில் இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
புதிய சிங்கள குடியேற்றத்திற்கான எதிர்ப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கோட்டபய அரசங்கத்தினால் கொண்டுவரப்பட்ட கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பில், வரவு செலவு திட்டத்திலும் நிதி ஒதுக்கபட்டுள்ளதோடு அமைச்சரவையிலும் அதற்கான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இது ஒரு படு மோசமான திட்டம். இது அரசியல் ரீதியாக, சூழலியல் ரீதியாகவும் தமிழ் மக்களை பாதிக்கின்ற ஒரு திட்டம்.

இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதற்கான பிரதான காரணம் வெலி ஓயாவிலும், வவுனியா வடக்கிலும் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்களுக்கு நீர் வளங்குவதற்காகும், புதிய சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்குமாகும்.
ஆகவே, அமைச்சர் சந்திரசேகர் சொல்லுவது போன்று தமிழ் மக்களின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்ட ஒன்று அல்ல. மாறாக, குடியிர்றப்பட்ட சிங்கள மக்களுக்காக கொண்டுவரப்பட்டதிட்டம் தான் இந்த திட்டம்.
இந்த திட்டத்தினுடாக இன்னும் சிங்கள குடியெற்றங்கள் வருவதற்கான அபாயம் இருப்பதாக நான் நினைக்கின்றேன். ஆகவே இந்த திடடத்தை எதிர்க்க வேண்டியது தமிழ் மக்களது கடமை. இது தனிய திட்டம் மாத்திரம் அல்ல. ஏற்கனவே இருக்கின்ற தமிழ் கிராமங்களும் அழியக்கூடிய அபாயமும் இருக்கின்றது.
குறிப்பாக வவுனியா வடக்கில் உள்ள அனைத்து கிராமங்களும் நீரில் மூழ்கும் அபாயமும் உள்ளது. உண்மையில் அரசாங்கத்தினுடைய முழு கவனமும் முல்லைத்தீவு சிங்கள குடியிராத்திலேயே உள்ளது.
கிவுல் ஓயா திட்டம் வேண்டாம்!
வடக்கு கிழக்கை மையமாக இணைத்த மாவட்டம் திருகோணமலை மாவட்டம். திருங்கிணைமலை மாவட்டத்தில் சுமாராக குடியேற்றங்கள் நிறைவடைந்துள்ளது.
அடுத்து இருப்பது முல்லைத்தீவு மாவட்டம். இதனூடாக தமிழர் தாயகத்திலுள்ள ஒருமைப்பாட்டை இல்லாமல் செய்கின்ற சதித் திட்டம் நீண்ட காலமாக இடம்பெற்று வருகிறது.

அதனுடைய முயற்சிகளில் ஒன்று தான் இந்த கிபுல் ஓயா திட்டம். ஆகவே, இந்த கிபுல் ஓயா திட்டத்தை எதிர்க்க வேண்டியதும், அதற்காக போராட வேண்டியதும் ஒவ்வொருவருடைய கடமையாகும்.
எனவே, சிவில் அமைப்புக்களால் முன்னெடுக்கபடுகின்ற போராட்டம்தான் வெற்றி பெறும் என்றும் இதனால் தமிழரசுக் கட்சி போன்ற அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் போராட்டங்களில் ஏனைய கட்சிகளும் பங்கேற்கும் என கூறி விட முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
பனிப்புயலில் சிக்கிய பல மாகாணங்கள்... போர்க்களமான சாலைகள்: 35 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri
அதிரடி காட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்: 153 ரன் விளாசிய கேரள வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தல் News Lankasri