ஐரோப்பிய சிந்தனையில் திளைத்திருக்கும் அரசு:அதிர்ச்சிக்குள்ளாக்கும் மகாநாயக்க தேரின் கருத்து..
ஆட்சியாளர்களின் கால்கள் இங்கிருந்தாலும் அவர்களின் தலை ஐரோப்பாவில் தான் இருக்கிறது.நாங்கள் பௌத்த பிக்குகளாக அடக்கு முறைகளுக்கு அடிபணிய கூடாது.தலைநிமிர்ந்து முகம் கொடுக்க வேண்டும் என அஸ்கிரிய மாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
மிஹிந்தலையில் நடைபெற்ற நுல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர்,
கிளர்ச்சியை தூண்டும் கருத்துக்கள்
நாட்டில் ஏற்படும் அசாதாரணத்திற்காக கதைக்க வேண்டும்.கலாசாரத்தை சீரழிக்கும் பாரிய பிரச்சினைக்கு பிக்குகள் மௌனம் காத்தால் யார் கதைப்பது? சில பௌத்த பிக்குகள் ஏன் இதற்கெல்லாம் கதைத்து தேவையில்லாத பேச்சுக்களை வாங்கிக் கொள்வானே என ஒதுங்கியிருக்கின்றனர்.

அப்படியிருந்தால் அந்த பிக்கு அமைதியானவர் மிகவும் கருணை கொண்டவர் என மக்கள் கூறுவார்கள்.ஆனால் பேச்சுகளை கேட்டு கேட்டாவது போராட வேண்டும்.சிங்கள பௌத்தத்தை பாதுகாப்பதற்கு கட்டாயம் அதை நாம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பனிப்புயலில் சிக்கிய பல மாகாணங்கள்... போர்க்களமான சாலைகள்: 35 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri