ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணிலின் நிலைப்பாடு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்புவது தமது பிரதான நோக்கமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வரவு செலவுத் திட்டம்
ஊடக நிறுவன பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் திடமான முடிவு எதனையும் அவர் வெளியிடவில்லை.

நாட்டின் மெய்யான பொருளாதார நிலைமைகளை வெளிப்படுத்திய காரணத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கடந்த பொது தேர்தலில் தோல்வியை தழுவ நேரிட்டது என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் வெற்றியீட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
செலவுகளை குறைத்து வருமானத்தை அதிகரிக்கும் வழிகளின் மூலம் நாடு வாங்குரோத்து நிலையிலிருந்து மீள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கிலும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமையவும் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri