கிளிநொச்சியில் பெருமளவான மஞ்சள் மற்றும் ஏலக்காய் மீட்பு - சந்தேகநபர் ஒருவர் கைது
கிளிநொச்சி - பூநகரி கௌதாரிமுனையில் வெட்டுக்காடு பகுதியில் இருந்து 2015 கிலோ 600 கிராம் மஞ்சள் மற்றும் 30 கிலோ 100 கிராம் ஏலக்காயும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சூட்சுமமான முறையில் கடல் மார்க்கமாகக் கடத்திவரப்பட்டு வெட்டுக்காடு பகுதியில் உள்ள சிறு காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து பூநகரி பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது கௌதாரிமுனை வெட்டுக்காடு பகுதியில் 2015 கிலோ 600 கிராம் மஞ்சள் மற்றும் 30 கிலோ 100 கிராம் ஏலக்காயும் மீட்கப்பட்டுள்ளதோடு, 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கடத்தல் சம்பவம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதோடு
மீட்கப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக
நபரையும் இன்று கிளிநொச்சி நீதிமன்றில் முட்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.