செவ்வந்தி விடயத்தில் தவறான அணுகுமுறை! விமல் பகிரங்கம்
வெளிநாட்டில் வைத்து கே.பியைக் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வந்தபோது ஊடகக் கண்காட்சி காண்பிக்கப்படவில்லை. எனினும், செவ்வந்தி விடயத்தில் அவ்வாறு நடப்பது தவறான அணுகுமுறையாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு நாட்டுக்குக் கொண்டு வரப்படும் குற்றவாளி விமானத்தில் இறங்குவது முதல் எல்லாத் தகவல்களும் மிகவும் சுவாரஷ்யமாக ஊடகங்களில் வெளியாகின்றன.ஊடகக் கண்காட்சி காண்பிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் இருந்த அரசுகள், இதை விடவும் பயங்கரமான குற்றவாளிகளை வெளிநாட்டில் கைது செய்து அழைத்து வந்துள்ளன.
தவறான அணுகுமுறை
உதாரணம் கே.பி. என்பவரைக் கைது செய்து நாட்டுக்குக் கொண்டு வந்தபோது, அவர் எப்படி வந்தார் என்பதுகூட யாருக்கும் தெரியாது.
செவ்வந்தி விடயத்தில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்க்கும்போது, பிரபலமாவதற்கு இதுதான் வழி என்ற தவறான உணர்வு சிறார்கள் மத்தியில் ஏற்படக்கூடும்.

எமது நாட்டு விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளில் சென்று பதக்கங்கள் வென்று வரும்போது, அவற்றுக்கு ஏன் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.
நான் ஊடகங்களைக் குற்றஞ்சாட்டவில்லை. பொலிஸார் இதனை ஊடகக் கண்காட்சியாக்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri