ஐசிசி புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ள அவுஸ்திரேலியா
போர்டர்- கவாஸ்கர் கிண்ண நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வெற்றி கொண்ட நிலையில், ஐசிசி செம்பியன்சிப் டெஸ்ட் இறுதிப்போட்டிக்கான புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணி, மேலும் முன்னேற்றம் கண்டுள்ளது.
நேற்று வரை 58.89 புள்ளிகளை கொண்டிருந்த அவுஸ்திரேலிய அணி, இன்றைய(30.12.2024) வெற்றியின் பின்னர் 61.46 புள்ளிகளை பெற்றுள்ளது.
இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் செம்பியன்சிப் இறுதிப்போட்டிக்கு தென்னாபிரிக்க அணியுடன் மோதும் வாய்ப்பை அவுஸ்திரேலிய அணி அதிகரித்துள்ளது.
அணிகளின் புள்ளிகள்
மறுபுறத்தில் இந்திய அணிக்கு அந்த வாய்ப்பு மிகவும் பின்னடைந்துப் போயுள்ளது. தற்போதைய நிலையில் தென்னாபிரிக்க அணி, புள்ளிப்பட்டியலில் 66.67 புள்ளிகளை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணி, 61.46 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்திய அணி, 52.78 புள்ளிகளை பெற்றுள்ளது. நியூஸிலாந்து அணி 48.21 புள்ளிகளையும், இலங்கை அணி 45.45 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam