சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம் கடலிலே சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள்
சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம் கடலிலே சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் என்பவற்றை கவனிக்காது இருப்பது கவலை தரும் விடயம் என வட மாகாண கடல் தொழில்இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.
நேற்றைய தினம் (5)யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் குச்சவெளியில் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் தொடர்பிலும் கடற்படையினரின் மோசமான செயல் என்பதுடன் சட்டவிரோத தொழில்களை அகற்றாமல் கடல் பாதுகாப்பை கவனிக்காமல் செய்கின்ற இந்த விடயத்தினால் இவ்வாறான சம்பவங்களை ஏற்படுகின்றன இவை மிகவும் கவலை அளிக்கிறது எனவே இதற்கு கடற்றொழில் அமைச்சர் நீதியான விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஆனால் முடிவு கிடைக்கவில்லை இது தொடர்பிலே சரியான தீர்மானம் எட்டப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இன்றைய தினம் சுற்றுச்சூழல் தினம் என்பதால் நிலத்திலே காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பொலித்தீன் அகற்றும் பணி யாழ் மாவட்டத்திலும் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் கடலிலே காணப்படும் சட்ட விரோத கடல் அட்டை பண்ணைகள் மற்றும் சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை அகற்றாமல் அதனை மீன்களும் உண்டு அதை நாமும் உண்டு பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும் இந்த செயற்பாட்டை தடை செய்யாமல் இருப்பது கவலையளிக்கிறது.
பருத்தித்தீவிலே அமைக்கப்பட்ட சீன அரசாங்கத்தின் கடல் அட்டைப் பண்ணையில் பல்வேறு பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகின்றன அவை அகற்றப்படவில்லை இதற்கு தற்போது உள்ள அரசாங்கம் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் கவனம் செலுத்தி இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை தடை செய்ய வேண்டும் இதனால் பல்வேறு ஆபத்துக்கள் நமது கடல் பரப்பில் ஏற்பட்டு கடல் வளம் அழிந்து போகும் நிலைமை இருந்ததாகவும் சுட்டிக்காட்டினர்.

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
