பிரித்தானியா விதித்த தடைகள்! சிங்கள தலைவர்களை இலக்கு வைக்கும் உலக நாடுகள்
இலங்கையின் நான்கு முக்கிய இராணுவ பிரமுகர்கள் மீது பிரித்தானியா சமீபத்தில் விதித்த தடைகள் இலங்கைக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல மேற்கத்திய சக்திகளுக்கும் இடையிலான இராஜதந்திர பதட்டங்களைத் தூண்டிவிட்டன.
பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட இந்தத் தடைகள், குறிப்பாக ஷவேந்திர சில்வா, ஜகத் ஜெயசூர்யா, வசந்த கரன்னாகொட மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்ட முன்னாள் இலங்கை இராணுவத் தளபதிகளை குறிவைக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது, மனித உரிமை மீறல்கள் நடந்ததற்கான ஆதாரங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) வழங்கியதைத் தொடர்ந்து இந்தத் தடைகள் அறிவிக்கப்பட்டன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கை ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் என இதனை கடுமையாக நிராகரித்து.
இங்கிலாந்து மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் அதன் உள் விவகாரங்களில் தலையிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
எனினும், பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கும் நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும் இராணுவ நடவடிக்கைகள் அவசியம் என்று கூறி, இலங்கை அரசாங்கம் தனது இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் ஒருதலைப்பட்சமாக பாதுகாத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிசி தமிழ் ஊடகத்திக் சிறப்பு நேர்காணலில் கலந்துக்கொண்ட பொருளாதார ஆய்வாளர் பாலா மாஸ்டர் பல விளக்கங்களை இது தொடர்பில் வழங்கியிருந்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan