எட்டாவது மகளிர் டி-20 உலகக் கிண்ண சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டி இன்று
8 ஆவது மகளிர் டி20 உலகக் கிண்ண சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியும் போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்க அணியும் இன்று மோதவுள்ளன.
இப்போட்டி தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இலங்கை நேரப்படி இன்று (26.02.2023) மாலை 06.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அவுஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆவலில் இப்போட்டியில் களமிறங்கியுள்ளது.
05 தடவைகள் சம்பியன்
10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் அவுஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென் ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
கேப்டவுனில் நடந்த முதலாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. இதில் 5 முறை சாம்பியனான அவுஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அவுஸ்திரேலிய மகளிர் அணி இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு 06 தடவைகள் தகுதி பெற்றுள்ளதுடன் 05 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
தென்னாப்பிரிக்க மகளிர் அணி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 22 மணி நேரம் முன்

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
