இந்தியாவுக்கு யாத்திரை போவதாக கூறி யாசகம் பெற்று வந்த பெண்கள் கைது
அநுராதபுரத்தில், பல்வேறு பொய்யான காரணங்களை கூறி, யாசகம் பெற்று வந்த 6 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசாய போன்ற புனித ஸ்தலங்களுக்கு செல்லும் யாத்திரிகர்களை பின்தொடர்ந்து சென்ற 6 பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள், கண் சத்திரசிகிச்சை, இந்தியாவிற்கு புனித யாத்திரை செல்வது போன்ற விசித்திரமான நோக்கங்களுக்காக யாசகத்தின் மூலம் பணம் வசூலித்தமை தெரியவந்துள்ளது.
முறைப்பாடுகள்
இந்த யாசகர்கள் தொடர்பில் ஏற்கனவே, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு யாத்திரீகர்களிடமிருந்து பல முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்திருந்தன.

இதன்படி, கைது செய்யப்பட்ட பெண்கள் தேவனம்பித்திஸ்ஸபுர, பதுலகம, வெஸ்ஸகிரிய, திசாவெவ, போன்ற இடங்களை சேர்ந்த 51 முதல் 80 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 21 மணி நேரம் முன்
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri