இரகசிய தகவலின் அடிப்படையில் பெண்ணொருவர் வீட்டில் வைத்து கைது
ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் நேற்றைய தினம் இரவு வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய பெண்ணொருவரே தேக்கவத்தை பகுதியிலுள்ள அவருடைய வீட்டில் வைத்து போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 2.7 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.