கிளிநொச்சியில் கஞ்சா பொதிகளுடன் பெண் ஒருவர் கைது (photo)
கிளிநொச்சி - மருதநகர் பகுதியில் 4.1கிலோகிராம் கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (23.02.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண்ணொருவர் கைது
கிளிநொச்சி - மருதநகர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே புளியங்குளம் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தரினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சா மீட்பு
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மறைத்து வைக்கப்பட்டிருத்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு சம்பவத்துடன் தொடர்புடைய வீட்டு உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளும் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.