நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு: பல கோணங்களில் விசாரணை (VIDEO)
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள மீன் வளர்ப்பு நீர்த்தேக்கத்தில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு இன்று காலை சடலமாக மீட்கப்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான கந்தையா ரமணி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நீர்த்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தலவாக்கலை பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்ட பின் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா அல்லது நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து நீர்த்தேக்கத்தில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாகப் பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.






நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
