வன்னியில் கொலை செய்யப்பட்ட பெண்: 5 மாதங்களின் பின் சந்தேகநபர் கைது
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - உடையார்க்கட்டுப் பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் 5 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் இந்துருவ பகுதியில் நேற்று (09.09.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை
கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த 60 வயதான நபரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று முல்லைத்தீவு நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan