ஓடும் ரயிலில் பாய்ந்து இளம் பெண் மரணம்! - பொலிஸார் தீவிர விசாரணை
ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல என்ற இடத்தில் இன்று (15) இரவு 7.45 மணியளவில் கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹபராதுவ பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். கொக்கல பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் முன்னால் உள்ள புகையிரத பாதையில் குறித்த பெண் குதித்துள்ளதாகவும் அவருக்கு சுமார் 30 வயது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஊருபொக்க பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.