வவுனியாவில் கடத்தப்பட்ட பெண்! பணம் வழங்காவிட்டால் கொலை செய்வதாக மிரட்டல்
வவுனியா - வாரிகுட்டியூரில் இருந்து 55 வயதுடைய பெண்ணை கடத்தி 500,000 ரூபா கப்பம் கோரிய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணை கடத்தி கப்பம் கேட்ட குழு
பெண்ணொருவரை கடத்தி சென்று அந்த பெண்ணின் மகளை தொலைபேசியில் அழைத்து 500,000 ரூபா பணம் கப்பம் கேட்ட குழுவொன்று தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது
சந்தேகநபர்கள் 26 தொடக்கம் 49 வயதுக்குட்பட்ட வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அத்துடன் கடத்தப்பட்ட பெண்ணின் மகளை மீட்கும் தொகையை வழங்காவிட்டால் கொலை செய்து விடுவதாக சந்தேகநபர்கள் அச்சுறுத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், குறித்த பெண்ணிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri
