வவுனியாவில் கடத்தப்பட்ட பெண்! பணம் வழங்காவிட்டால் கொலை செய்வதாக மிரட்டல்
வவுனியா - வாரிகுட்டியூரில் இருந்து 55 வயதுடைய பெண்ணை கடத்தி 500,000 ரூபா கப்பம் கோரிய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணை கடத்தி கப்பம் கேட்ட குழு
பெண்ணொருவரை கடத்தி சென்று அந்த பெண்ணின் மகளை தொலைபேசியில் அழைத்து 500,000 ரூபா பணம் கப்பம் கேட்ட குழுவொன்று தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது
சந்தேகநபர்கள் 26 தொடக்கம் 49 வயதுக்குட்பட்ட வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அத்துடன் கடத்தப்பட்ட பெண்ணின் மகளை மீட்கும் தொகையை வழங்காவிட்டால் கொலை செய்து விடுவதாக சந்தேகநபர்கள் அச்சுறுத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், குறித்த பெண்ணிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
