விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு
கிண்ணியா - மட்டக்களப்பு பிரதான வீதி உப்பாறு பாலத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மற்றும் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாகக் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் மூதூர் - இறால்குழி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான ஜோதிமணி (42வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்குச் சென்று மீண்டும் திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது உப்பாறு பாலத்துக்கு அருகில் பின்புறமாக வந்த பேருந்து முந்திச்செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் மோதியதாகவும் இதனையடுத்து சம்பவ இடத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளைக் கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுதப் படைகளின் வசம் ஹோர்முஸ் நீரிணை: எந்தவொரு நாடும் பயன்படுத்த இடமளிக்கமாட்டோம் - ஈரான் எச்சரிக்கை
போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ஈரானின் மணிமகுடத்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்! குறிவைக்கப்பட்ட இலக்குகள் - அதிரடியாக களமிறங்கவுள்ள துருப்புகள்..
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri
சனியின் பார்வையால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்... வறுமை நீங்கி செல்வம் பெருகுவது எந்த ராசிக்கு? Manithan
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam