இறுதி சடங்கிற்கு சென்று வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
கொழும்பு, பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை அளுத்நுவர பிரதேசத்தில் அரச பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் இன்று (12) உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை பகுதியை சேர்ந்த பொடிமணிகே என்ற எழுபத்திரண்டு வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாணந்துறையிலிருந்து மஹியங்கனை நோக்கிச்சென்று கொண்டிருந்த அரச பயணிகள் பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதனைத்தொடர்ந்து பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடை பிரதேசத்தில் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கிற்கு சென்று பொலன்னறுவைக்கு திரும்புவதற்காக பாணந்துறை மஹியங்கனை பேருந்தில் ஏறியபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam