இறுதி சடங்கிற்கு சென்று வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
கொழும்பு, பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை அளுத்நுவர பிரதேசத்தில் அரச பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் இன்று (12) உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை பகுதியை சேர்ந்த பொடிமணிகே என்ற எழுபத்திரண்டு வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாணந்துறையிலிருந்து மஹியங்கனை நோக்கிச்சென்று கொண்டிருந்த அரச பயணிகள் பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதனைத்தொடர்ந்து பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடை பிரதேசத்தில் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கிற்கு சென்று பொலன்னறுவைக்கு திரும்புவதற்காக பாணந்துறை மஹியங்கனை பேருந்தில் ஏறியபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan