அவுஸ்திரேலியாவில் இலங்கையரின் வாகனத்தில் மோதுண்டு பெண் பலி
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் ஓட்டிச் சென்ற வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விக்டோரியாவின் கிப்ஸ்லேண்ட் பகுதியில் தவறான பாதையில் பயணித்ததாகக் கூறப்படும் கார் மோதியதில் ஒரு பெண் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:45 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையர் கைது
68 வயதான பெண், நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இலங்கையரின் வாகனத்தில் மோதுண்டு காயமடைந்துள்ளார்.

ஆபத்தான நிலையில் மெல்போர்ன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய சம்பத் ஜயசுந்தர என்ற இலங்கையர் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார். எனினும் குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri