நடுவானில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்: 28 பேர் தப்பியோட்டம் - உலக செய்திகள்
நடுவானில் பெண் ஒருவர் தனக்கு பிரசவவலி வந்துவிட்டதாக கூறியதைத் தொடர்ந்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் 28 பேர் விமானத்திலிருந்து இறங்கி ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொராக்கோ நாட்டிலிருந்து துருக்கி நோக்கி விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. விமானம் ஸ்பெயின் பகுதியில் பறந்துகொண்டிருந்தது.
இதன்போது, திடீரென பெண் ஒருவர் தனக்கு பிரசவவலி வந்துவிட்டதாக கூறவே, விமானம் அவசரமாக பார்சிலோனா நகரிலுள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அங்கு விமானம் தரையிறங்கியதும், விமானத்திலிருந்த 28 பேர் தப்பியோடிய நிலையில் 14 பேர் மட்டுமே பொலிஸாரிடம் சிக்கினார்கள்.
இந்நிலையில், பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பது உண்மைதான் என்றும், ஆனால், அவருக்கு பிரசவ நேரம் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.
28 பேர் தப்புவதற்காக அந்தப் பெண் தனக்கு பிரசவவலி வந்ததுபோல நடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான உலக செய்திகளின் தொகுப்பு,
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 22 மணி நேரம் முன்
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam