பொலிஸ் அதிகாரியை தலைக்கவசத்தால் தாக்கிய பெண்!
குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவர் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட சம்பவமொன்று வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்துக்குள் இரு பெண்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை கட்டுப்படுத்த சென்ற போதே பொறுப்பதிகாரி ஒருவர் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பில் மத்துகம உபில்கம பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரண்டு பெண்களின் முறைப்பாடு
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களும் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.
இவர்களது முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே இருவரிடயே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதன்போது அவர்களை கட்டுப்படுத்த முயன்ற பொலிஸ் பொறுப்பதிகாரி மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
you my like this video