மன்னார் தீவு காற்றாலை உற்பத்தி, கணிய மணல் அகழ்விற்கு பொருத்தமானதாக இல்லை : எம்.ஏ.சுமந்திரன்
மன்னார் தீவு என்பது கடல் மட்டத்தில் இருந்து சற்று குறைவான இடத்தில் காணப்படுவதால் இத் தீவு காற்றாலை உற்பத்தி, கணிய மணல் அகழ்விற்கு பொருத்தமானதாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த விசேட கூட்டம் இன்று (23) காலை மன்னாரில் இடம் பெற்றுள்ளது.
சட்ட ரீதியாக நடவடிக்கை
மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கணிய மணல் அகழ்வு தொடர்பான சட்ட ரீதியாக நடவடிக்கைகளை முன் னெடுக்கின்றமை தொடர்பாக மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகளை ஒன்றிணைத்து கலந்துரையாடும் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் இன்றைய தினம் (23) பொது அமைப்புக்களை ஒன்றிணைத்து விசேட சந்திப்பை மேற்கொண்டோம். மக்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட அமைப்புக்களை இவ்வாறு சந்தித்து மன்னார் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம்.
பாரிய அளவில் வீழ்ச்சி
மன்னாரில் இரண்டு பாரிய அச்சுறுத்தல்களை மக்கள் எதிர் கொள்ளுகிறார்கள்.காற்றாலை அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் செயல் திட்டம்.அதில் மூன்று திட்டங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு திட்டத்தின் அடிப்படையில் காற்றாடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மற்றைய இரு திட்டங்களும் உடனடியாக செயல் படுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதை அடிப்படையாக வைத்து காற்றாலை அமைக்கின்றதன் மூலம் இப்பிரதேசங்களில் எற்படுகின்ற பல விதமான பாதிப்புக்களை மக்கள் ஏற்கனவே நேரடியாக அனுபவிக்கின்றார்கள்.
குறிப்பாக கடற்றொழில் சமூகம் இதன் விளைவாக வழமையாக அவர்கள் பிடிக்கும் மீன்களின் தொகைகளில் மாற்றம் காணப்பட்டு குறைகின்றமை மற்றும் நீரோட்டங்களின் திசைகள் வழமை போல் இல்லாது மாற்றமடைவதும் உள்ளடங்களாக பல்வேறு காரணிகளால் பிடிக்கப்படுகிற மீன்களின் தொகை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டதோடு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,மன்னார் பிரஜைகள் குழு,கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri
