எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயார் - விமல் அறிவிப்பு
போர் வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையையும் எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20.05.2026) இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்துவிட்டு வெளியேறும் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு தொடரப்படுமா..!
இதன்போது போர் வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வழக்கு தொடரப்படுமா என ஊடகவியலாளர்கள் வினவியிருந்தனர்.

இதற்கு அவர் பதிலளிக்கையில், போர் வீரர்களை நினைவுகூர்ந்து, மலர்க்கொத்து ஏந்திச் சென்று அவர்களுக்கு அந்த மரியாதையைச் செலுத்துவதற்கு எடுத்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்றால், அத்தகைய வழக்கை எதிர்கொள்ள நாங்கள் எந்த வகையிலும் தயங்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அவசரமாக 4000 வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப் பெற்ற பிரபல தொழிலதிபர்கள்! இரகசியம் கசிந்தது எப்படி..