வீரவன்சவிற்கு ஏற்பட்ட பதற்றத்தில் கூடாரத்தை கழற்றிய இரகசியம்!
புதிய கல்வி சீர்திருத்த செயல்முறையை உடனடியாக மீளப் பெற வேண்டும் என்றும், பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் கோரி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவினால் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தரம் 6 தொடர்பான புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்துவது அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, விமல் வீரவன்ச இவ்வாறு சத்தியாக்கிரகத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
அத்தோடு, கல்வி மறுசீரமைப்பில் அரசாங்கம் கையாண்ட விதம் பிழை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்திடம் உள்ள முக்கியமான குறைபாடு யாரையும் நம்பாத தன்மை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டுநடப்புகள் நிகழ்ச்சி...
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan