பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா இல்லையா? சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாது ஒழுங்கீனமாக நடந்துக்கொள்ளும் விதத்திற்கு அமைய மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். மக்கள் கொரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டுக்கு வழங்கும் பங்களிப்பின் அடிப்படையில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.
மக்கள் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு அமைய நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த துரதிஷ்டவசமான நிலைமையை நாட்டில் இருந்து ஒழிக்க முடியும். உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை வைரஸ் கட்டுப்பாட்டில் சிறந்த நிலைமைக்கு வந்துள்ளது.
தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடந்துள்ளதால், மக்கள் சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய வாழ பழகிக்கொள்ள வேண்டும்.
தொற்று நோய் நிலைமையானது மிக நீண்டகாலத்திற்கு தொடர்ந்தால், அது பல பொருளாதார பிரச்சினைகளை உருவாக்கலாம். இதனால், பலம் துன்பங்களை அனுபவிக்க நேரிடும் எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam