நாட்டில் கடும் சமயல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும்? வெளியாகியுள்ள தகவல்
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக நாட்டில் கடும் சமயல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என வர்த்தக துறையின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது நாட்டில் வர்த்தக நிலையங்கள், பல்பொருள் அங்காடிகளில் சமயல் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது 12.5 கிலோ சமயல் எரிவாயுவின் விலையை அதன் தற்போதைய விலையான 1,493 ரூபாவில் இருந்து 2,148 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அதற்கு அரசாங்க தரப்பில் சாதகமாக பதிலளிக்கவில்லை. இதனால் தற்போது சந்தையில் சமயல் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சமயல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதை நுகர்வோர் விவகார ஆணையம் கடுமையாக எதிர்த்ததாகக் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
