அரசாங்கத்தால் நடத்தப்படுகின்ற சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை: சஜித்
அரசாங்கத்தால் நடத்தப்படுகின்ற சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
அவர் இன்று (03.01.2023) வெளியிட்ட ஊடக குறிப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கமைய "நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில், சுதந்திர தின நிகழ்வுக்குப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது" என சஜித் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர தின நிகழ்வு
அத்துடன், சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகப்பெருமவும், சுதந்திர தின
நிகழ்வைப் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.